states

img

‘‘வெட்கமாயில்லையா... செத்தது 20 இந்துக்களாயிற்றே?’’

ஜம்மு, நவ.27- விளம்பரத்திற்காக நேரடி ஒளிபரப்புக் கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் இந்து பண்டிட்டுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 2019-ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து தாக்கு தல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். தாக்கு தல்கள் ஒரு பக்கம். மறு பக்கத்தில் வேலை க்கு வராமல் இருந்தால் சம்பளம் இல்லை,  வேலை போய்விடும் என்ற அரசின் மிரட்டல். ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்ட பிறகு, நிலைமையில் பெரும் முன்னேற் றம் என்று பாஜக கூறி வந்தது. இதை வெளியுலகுக்கும் சொல்லலாம் என்று நினைத்து ஜம்முவில் ஒரு கூட்டத்தைக் கூட்டி யிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும் முடிவெடுத்தனர். அரசு ஊழியர்களுக்கான நெருக்கடி, தங்க ளுக்கு சாதகமாக இருக்கும் என்று பாஜக வினர் நினைத்தார்கள். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களோ, கடந்த சில ஆண்டுகளில் நிலைமை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை ஆதாரங்க ளுடன், புள்ளிவிபரங்களுடன் அம்பலப் படுத்தி விட்டார்கள். 

அதில் ஒருவர், ‘‘கடந்த ஓராண்டில் பள்ளத்தாக்கில் சுமார் 20 இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் வெட்கப்படவில்லையா?’’ என்று ஆவேச மாகக் கேட்டிருக்கிறார். ‘‘எங்களை இட மாற்றம் செய்ய முடியாவிட்டால் ஜேசிபி இயந்திரத்திற்குக் கீழ் வைத்து நசுக்கி விடுங்கள்’’ என்று மற்றொருவர் குமுறியி ருக்கிறார். ஒரு பெண் ஊழியர், ‘‘இரண்டு கால்களில் சென்று விட்டு, நான்கு கால்கள் என்னை சுமந்து வரும் நிலையை நினைத்து அச்சமாக உள்ளது. எனக்கு இரண்டு சிறிய பெண் குழந்தைகள் உள்ள னர். அவர்களின் நிலைமை என்னவாகும்?’’ என்ற அவரது கேள்வி பாஜக தலைவர்க ளை வாயடைக்கச் செய்தது. ‘‘வீடுகளை வாடகைக்குத் தந்த இஸ்லா மியர்களிடமிருந்து எந்தவிதப் பிரச்சனைக ளும் இல்லாமல் இருந்தது. ஆனால், அண்மைக்காலத்தில் எங்களை வீடுகளைக் காலி செய்து விட்டுச் செல்லுங்கள் என்கிறார் கள். அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறார்கள்’’ என்றார் ஒரு ஊழியர்.

‘‘நன்றாகத்தான் இருந்தோம்’’

இந்த ஊழியர்கள் எல்லாம் இப்போது பள்ளத்தாக்குகளில் பணிக்கு நியமிக்கப் பட்டவர்கள் இல்லை. 10 முதல் 15 ஆண்டு களாக அங்கு பணி புரிந்து வருகிறார்கள். எங்களை ஜம்முவுக்கு மாற்றுங்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். ‘‘கடந்த 12 ஆண்டுகளாக நான் பள்ளத்தாக்கில்தான் வேலை பார்க்கிறேன். எப்போதாவது எனக்கு இடமாற்றம் தாருங்கள் என்று கேட்டேனா?’’ என்கிறார் ஒருவர். “அரசாங்கம் பேனாவை வைத்து கொலை செய்கிறது. தீவிரவாதிகள் துப்பாக் கியை வைத்துக் கொலை செய்கிறார்கள். எங்கள் ஊதியம் பல மாதங்களாக நிறுத் தப்பட்டுவிட்டது. பள்ளிக்குச் செல்லும் எனது மகளின் கல்விக்கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை’’ என்று தனது அவல நிலையை ஒரு ஊழியர் கூறினார்.